Thursday, May 9, 2024

மனைவி மற்றும் மகன் என்று குடும்பத்துடன் அபுதாபி கோவிலில் தரிசனம் செய்யும் சரத்குமார்.! வைரளாகி வரும் புகைப்படம்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் சரத்குமார். சமாஜமலோ  ஸ்த்ரீ என்ற தெலுங்கு படம் மூலம் 1986 ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சரத்குமார். பின்னர் தமிழில் கண் சிமிட்டும் நேரம் என்ற படத்தில் நடித்திருந்தார். அதன்பின்னர் ஏகப்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ள சரத்குமார் அவர்கள் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறிவிட்டார்.

நடிக்க வருவதற்கு முன்பே சாயாதேவி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் சரத்குமார். இவர்களது திருமணம்  1984 ஆம் ஆண்டு நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களில் ஒருவர்தான் நடிகை வரலக்ஷ்மி. மற்றொருவரின் பெயர் பூஜா.

பின்னர் முதல் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். பின்னர் முறைப்படி விவாகரத்து பெற்றுக்கொண்டார்கள். இந்நிலையில் நடிகை ராதிகாவுடன் ஏற்பட்ட காதலால் அவரை இரண்டாவதாகா திருமணம் செய்துகொண்டார் நடிகர் சரத்குமார்.

சந்திரமுகியின் இரண்டாம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ராதிகா நடித்துள்ளார்.அவர் குடும்பத்திற்கும் திரைப்படங்களுக்கும் இடையே ஒரு நேரடி கோட்டைப் பராமரிக்கிறார். இவர் தனது குடும்பத்தினருடன் சமீபத்தில் அபுதாபியில் உள்ள கோவிலுக்கு சென்றுள்ளார். இந்த படங்கள் மிகவும் பிரபலமாகி வருகின்றன.

RELATED ARTICLES

Most Popular