உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா இன்று நடைபெறுகிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி, பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், ஆன்மீக தலைவர்கள், அமைச்சர்கள், திரையுலக பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் என லட்சக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர்.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வுக்கு பக்தர்களின் வருகையால் அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. அயோத்தியில் கும்பாபிஷேகம் நடைபெறும் அதே நேரத்தில், இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் யாகங்கள், ஹோமங்கள், சிறப்பு பூஜைகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில், பொது இடங்களில் எல்.இ.டி திரை அமைத்து, அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. PVR INOX திரையரங்குகளில் இன்று காலை 11 மணி முதல் 3 மணி வரை ராமர் கோயில் திறப்பு விழா நேரலையில் திரையிடப்படுகிறது.
நாடு முழுவதும் ஏராளமான நகரங்களில் உள்ள 160க்கும் அதிகமான pvr inox திரையரங்கங்களில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நேரலையில் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக கட்டணமாக 100 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க 8000-க்கும் மேற்பட்டோருக்கு அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் இருந்து யாரெல்லாம் கலந்துகொள்ள போகிறார்கள் என்ற விவரம் தற்போது வெளியாகியுள்ளது.