Thursday, May 9, 2024

உதவின்னு கேட்டா ஓடோடி வரும் கே பி ஒய் பாலாவின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா..! இப்படியொரு பிள்ளைய பெற்றதற்கு இவங்க தான் பெருமை படணும்..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளின் மூலம் தமிழ்நாடு முழுவதும் பிரபலமான நபர் தான் பாலா. இவர் குக் வித் கோமாளி யில் கோமாளியாக களமிறங்கி பார்ப்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளார். சமையல் நிகழ்ச்சி என்பதை மறக்கும் அளவிற்கு காமெடி நிகழ்ச்சியாகவே நாம் இதை பார்க்க தொடங்கி விட்டோம் என்றே கூறலாம். அந்த அளவிற்கு பாலாவின் காமெடியும் புகழின் காமெடியும் இந்த நிகழ்ச்சிக்கு தூண்களாகவே இருந்துள்ளது.

இந்த நிலையில் குக் வித் கோமாளியில் கிடைக்கப்படும் பரிசு பொருட்களை இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவும் மனம் கொண்டவராகவே இருந்தார் பாலா. இதற்காகவே அவர் நிகழ்ச்சியில் ஜெயித்து பரிசுகளை வாங்க வேண்டும் என்று முழு ஆர்வத்துடன் பங்கேற்றார்.

பாலா இதுவரை தனது சொந்தப் பணத்தைப் பயன்படுத்தி பொதுமக்களுக்கு நான்கு இலவச ஆம்புலன்ஸ்களை வாங்கியுள்ளார். சமீபத்தில், மிஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இதுவே செய்யப்பட்டது. அவர் தனது சொந்த ஊரான பல்லாவரம், அனகாபுத்தூர், பாம்பல் மற்றும் அண்டை பகுதிகளில் உள்ள 200 வீடுகளுக்கு தலா ரூ.1000 வீதம், கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக ரூ.2 லட்சம் வழங்கினார்.

இப்படி ஊருக்கே அள்ளிக் கொடுத்த பாலாவின் குடும்பத்தை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள் . அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

RELATED ARTICLES

Most Popular