தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பூ. இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தொடர்ந்து ஹிட் திரைப்படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அளித்திருக்கிறார். தனது நடிப்பு திறமையின் மூலம் தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவில் நிலைநாட்டியுள்ளார் குஷ்பூ.
நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களை கவர்ந்து அந்த காலத்திலேயே குஷ்புவிற்கென்று ரசிகர்களால் தனி கோவில் கட்டப்பட்டது. இதன்படி நடிப்பின் உச்சத்தில் இருக்கும்போதே சுந்தர்சியை காதலித்து 2000ஆம் வருடத்தில் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின்பு சினிமாவில் நடிப்பதில் இருந்து விலகி இருந்தார். இவருக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இதனையடுத்து தற்போது அரசியலில் களமிறங்கி கலக்கிக் கொண்டிருக்கும் குஷ்பூ தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.
நடிகர் மன்சூர் அலிகான் திரிஷா குறித்து பேசியது பெரும் சர்ச்சையானது. அவருக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் இதுகுறித்து நடிகை குஷ்பு கருத்து தெரிவித்தபோது, எக்ஸ்
சமூக வலைதள பக்கத்தில் நபர் ஒருவர், மணிப்பூர் பெண்கள் பாலியல் கொடுமைக்கு உள்ளானபோது எந்த நடவடிக்கையும் எடுக்காத குஷ்பு, தற்போது திரிஷாவுக்காக குரல் கொடுப்பதாக விமர்சனம் செய்திருந்தார்.
இந்நிலையில் இவர்க்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.இதில் மூத்த மகளை சினிமாவில் நடிகை ஆக்க முயற்சி செய்து வருகிறார் குஷ்பு. தற்போது தனது மகளின் தீபாவளி கொண்டாட்டத்தில் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் மீண்டும் வைரலாகி வருகிறது.