Monday, May 20, 2024

இந்தாம்மா ஏய்” இனி இல்லை.. மாரிமுத்துவுடன் கடைசியாக எதிர்நீச்சல் படப்பிடிப்பில் நடிகர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்.!

கவிஞர் வைரமுத்துவிடம் உதவியாளராக இருந்தவர் மாரிமுத்து. பின்னர் இயக்குனர் வசந்த்திடம் உதவி இயக்குனராக சேர்ந்த இவர், வசந்த் இயக்கிய “ஆசை” உள்ளிட்ட சில படங்களில் பணியாற்றியுள்ளார். பின்னர் இயக்குனராக களம் இறங்கினார் மாரிமுத்து.

நடிகர் பிரசன்னா நடித்து வெளியான “கண்ணும் கண்ணும்” என்ற திரைப்படம் மாரிமுத்து இயக்கியது தான். தொடர்ந்து “புலிவால்” படத்தை இயக்கிய

இவர், பிறகு படம் இயக்குவதை நிறுத்திவிட்டு, நடிக்க ஆரம்பித்தார். மிஷ்கினின் “யுத்தம் செய்” படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் மாரிமுத்து.

பரியேறும் பெருமாள், ஜெயிலர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவர் தற்போது இந்தியன் 2விலும் நடித்திருப்பதாகத் தெரிகிறது. திடீரென்று மாரடைப்பால் இறந்த மாரிமுத்துவின் நினைவேந்தல் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது.

இவருடன் படப்பிடிப்பில் நடிகர்கள் கடைசியாக எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

RELATED ARTICLES

Most Popular