Friday, February 14, 2025

வன்னி தேர்தல் மாவட்டத்தில் 423 வேட்பாளர்கள் : எங்கள் மக்கள் சக்தி மற்றும் சிறிரெலோ கட்சி வேட்புமனுக்கள் நிராகரிப்பு

- Advertisement -
- Advertisement -

நாடாளுமன்றத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் பாேட்டியிடுவதற்கு 22 கட்சிகள் மற்றும் 25 சுயேட்சை குழுக்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் நான்கு குழுக்களின் விண்ணப்பங்கள் நிராகரிகரிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரச அதிபரும் தேர்தல் தெரிவித்தாட்சி அலுவலருமான பீ.ஏ.சரத்சந்திர தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் கடந்த நான்காம் திகதி ஆரம்பிக்கப்பட்டு இன்று (11.10) மதியம் 12 மணியுடன் நிறைவுக்கு வந்திருந்தன.

அந்தவகையில் வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் அலுவலகத்தில் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

இதன்படி, இம்முறை வன்னி தேர்தல் மாவட்டத்தில் 24 அரசியல் கட்சிகளும் 27 சுயேட்சைக் குழுக்கள் என மொத்தமாக 51குழுக்கள் வேட்புமனுக்களை கையளித்திருந்தன.

அவற்றில் இரண்டு அரசியல் கட்சிகள் மற்றும் இரண்டு சுயேட்சை குழுக்களினது விண்ணப்பங்கள் உரிய முறையில் பூர்த்தி செய்யப்படாத மற்றும் கையளிக்கப்படாத காரணத்தினால் தேர்தல் அலுவலகத்தால் நிராகரிக்கப்பட்டிருந்தது.

குறிப்பாக எங்கள் மக்கள் சக்தி மற்றும் சிறிரெலோ கட்சியின் ப.உதயராசா போட்டியிடவிருந்த ஜனநாயக தேசியக் கூட்டணி ஆகிய கட்சிகளின் வேட்புமனுக்களே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளன.அந்தவகையில் 22 அரசியல் கட்சிகள் மற்றும் 25 சுயேட்சை குழுக்களின் விண்ணப்பங்களும் என 47 ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அரச அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை 2024 ஆம் ஆண்டிற்கான பொதுத்தேர்தலில் 6 நாடாளுமன்ற ஆசனங்களை பெற்றுக் கொள்வதற்காக வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னி தேர்தல் மாவட்டத்தில் 423 வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular