Wednesday, April 22, 2026

வவுனியாவில் வெள்ளை ஈ தாக்கம் அதிகரிப்பு!

- Advertisement -
- Advertisement -

வவுனியாவில் தென்னைமரங்களில் வெள்ளை ஈ தாக்கம் அதிகரித்து தேங்காய் உற்பத்தி குறைந்துள்ள நிலையில் செய்கையாளர்கள் பெரும் கஸ்டத்திற்கு முகம்கொடுத்து வருகின்றனர்.

இந் நிலையில் வவுனியா முருகனூர் பகுதியில் உள்ள விவசாயி ஒருவரின் பண்ணையில் உள்ள தென்னை மரமொன்றில் வெள்ளை ஈயை கட்டுப்படுத்தும் நுண்ணங்கி விட்டு கட்டுப்படுத்தும் முறை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், விவசாய போதனாசிரியர்களுக்கும் இது தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டது.

இதன்போது வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் பி. அற்புதசெல்வன், விவசாய ஆராச்சியாளர்கள் உட்பட விவசாயிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular