சாந்தனின் இறுதிக் கிரியைகள் நிறைவடைந்த நிலையில் பூதவுடல் அவரது இல்லத்தில் இருந்து ஏடுத்துச் செல்லப்பட்டு தேவன் குறிச்சி அறிவகம் சன சமூக நிலையத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அங்கு அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றது.
அதன் பின்னர் அவரது வித்துடல் இல்லத்தில் வைக்கப்பட்டு, அஞ்சலி செலுத்திய பின்னர் அவர் கற்ற பாடசாலையான் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லுரியில் அஞ்சலி செலுத்திய பின்னர் உடுப்பிட்டி ஊடாக வல்வெட்டித்துறையில் உள்ள தலைவர் பிரபாகரனின் இல்லத்திற்கு வித்துடல் தற்பொழுது எடுத்துச் செல்லப்படுகின்றது.
அதன் பின்னர் அங்கிருந்து எல்லாம் குளம் மைதானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ் இறுதி அஞ்சலி நிகழ்வில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சமய தலைவர்கள், உறவினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்குபற்றியுள்ளனர்.