சீனாவின் மேற்கு பகுதியில் உள்ள ஜின்ஜியான் மாகாணத்தில் இன்று (23.01) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கமானது, ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நிலநடுக்கத்தால் 02 வீடுகள் இடிந்து விழுந்துள்ளதுடன், நாட்டில் பல ரயில் பயணங்களை இடைநிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மின்கம்பிகள் உடைந்தமையினால் அப்பகுதியில் மின்சார விநியோகமும் தடைப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.