Thursday, May 9, 2024

செத்தா இப்படி சாகணும்யா.! இறப்பதற்கு முன்பே சொல்லி வைத்த விஜயகாந்த்..! அப்படியே நடந்தது தான் ஆச்சிரியமே..!

திரைப்பட நடிகர், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் விஜயகாந்த். இவர் கடந்த 1952 ஆம் வருடம் ஆகஸ்ட் 25 ஆம் தேதி விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை ராமானுஜபுரம் கிராமத்தில் பிறந்தார்.

vijayakanth

அதனைத் தொடர்ந்து, இவரது குடும்பம் சிறுவயதிலேயே மதுரைக்கு குடி பெயர்ந்தது. மதுரையில் வளர்ந்த விஜயகாந்த் சினிமா மீது மோகம் கொண்டு படிப்பின் மீது ஆர்வம் காட்டாமல், தந்தையின் கண்காணிப்பில் இயங்கி வந்த அரிசி ஆலையில் சிறு சிறு பணிகளை செய்து வந்தார்.

டேக்கன் என்ற பிரெஞ்சு படத்தின் ரீமேக்கான விருதகிரி படத்தை விஜயகாந்த் நடித்து இயக்கினார். ஐந்து வருடங்கள் படங்கள் இல்லாமல் ஓய்வெடுத்த பிறகு, சகாப்தம் திரைப்படத்தில் நடிகர் சண்முக பாண்டியனின் முதல் படமான தனது மகனுடன் கேமியோவில் தோன்றினார். நவம்பர் 2015 இல், அவர் மீண்டும் ஒரு திரைப்படத்தில் நடிக்க வந்தார் – அருண் பொன்னம்பலத்தின் தமிழ் என்று சொல், அவரது மகன் சண்முக பாண்டியனுடன், அவருடன் இரண்டாவது படம்.

எந்த ஒரு இயக்குனரும் வாய்ப்பு கொடுக்காமல் இருந்த காலத்தில் கூட அப்படியே விடாமல் தன்னுடைய சொந்த முயற்ச்சியால் மொத்த மக்களின் மனதிலும் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்த நடிகர் தான் விஜய் காந்த். உழைப்பையும் கமல், ரஜினி உச்சத்தில் இருந்த கால கட்டத்தில் இவர் தனக்கான ரசிகர்களை சேர்த்தார். இப்படி இருக்கும் நிலையில் இறப்பதற்கு முன்பே,

செத்தா இப்படி சாகணும் என்று கூறியிருக்கிறார் விஜயகாந்த்.  அந்த வகையில் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் தீவிர ரசிகரான விஜயகாந்த் எம்ஜிஆர் மறைவு செய்தியை கேட்டு மிகவும் வேதனையில் இருந்தாராம் . அப்போது அவருக்கு அஞ்சலி செலுத்தி விட்டு,

வீடு திரும்பும் போது எம்ஜிஆரின் உடலை பார்க்க ஏராளமான மக்கள் ஓடுவதை பார்த்திருக்கிறார்.  பின்னர் பக்கத்தில் இருந்த தயாரிப்பாளர் சிவாவிடம் செத்தா இப்படி சாகணும்யா என்று கூறினாராம்.  அன்று விஜயகாந்த் எதற்காக இப்படி கூறினார் என்று தெரியவில்லை.

இருந்தாலும் கேப்டன் விஜயகாந்தின் இறப்பில் எம்.ஜி.ஆருக்கு வந்த கூட்டத்தை விட மூன்று மடங்கு அதிகம் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Most Popular