Monday, May 20, 2024

இயக்குனர் மணிரத்தினம் வீட்டு மாடித்தோட்டம்.. பலவிதமான காய்கறிகளை விவசாயம் செய்யும் நடிகை சுஹாசினியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!

இந்திய திரையுலகில் முக்கிய இயக்குனராக வலம்வரும் மணிரத்தினம் பல்லவி அனுபல்லவி என்ற கன்னட திரைப்படத்தை முதல் இயக்கினார். இந்த படத்தை தொடர்ந்து மலையாளத்தில் உணரு படத்தையும், தமிழில் பகல் நிலவையும் இயக்கினார்.

அதன் பின்னர் மௌன ராகம், நாயகன், அக்னி நட்சத்திரம் உட்பட பல படங்களை இயக்கியுள்ளார். ரோஜா திரைப்படத்திற்குப் பின்னர் இவர் இந்திய அளவில் பிரபலமான நிலையில், ஏ.ஆர்.ரகுமானும் இசையமைப்பாளராக அந்த படத்தில் அறிமுகம் செய்யப்பட்டார்.

முதல் திரைப்படத்தில் இருந்து தளபதி வரை இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றி வந்த மணிரத்தினம், அதனை தொடர்ந்து ஏ.ஆர்.ரகுமானுடன் கைகோர்த்து தனது திரைப்பணியை மேற்கொண்டு வந்தார்.

இதற்கிடையில் செய்யாறு பாலு, மணிரத்தினம் மற்றும் இளையராஜா இடையேயான நட்பு முறிந்தது தொடர்பாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

அதில், “பாலச்சந்திரன் தயாரிக்கும் திரைப்படத்தை மணிரத்தினம் இயக்குவதாக இருந்தபோது இளையராஜாவின் ஸ்டுடியோவுக்கு மணிரத்தினம் சென்றுள்ளார். அங்கே இளையராஜாவுக்கும், மணிரத்தினத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

மணிரத்தினம் அண்மையில் இயக்கிய பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகமாக வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. இவர் சொந்தமாக வீட்டு மாடியில் தோட்டம் வைத்து விவசாயம் செய்து வருகிறார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

RELATED ARTICLES

Most Popular