ஹரி தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். இவரது அதிரடி-மசாலா படங்களின் காரணமாக இவர் பரவலாக அறியப்படுகிறார். இயக்குனர் ஹரி தமிழ் சினிமாவிற்கு பல தரமான படங்களை தந்தவர்.
இவர் படம் எப்போ தொடங்குகிறது எப்போ முடிகிறதுக்கே என்பதே தெரியாது அந்த அளவிற்கு வேகமாக கதை நகழும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.ஹரி படங்கள் என்றாலே ஆக்ஷனுக்கு கேட்கவா வேண்டும் பிரித்து எடுத்திருப்பார்.
சாமி, அருள், ஆறு, சிங்கம் உள்ளிட்ட சூப்பர் ஹிட், மாஸ் திரைப்படங்களை கொடுத்த பிரபல இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் புதிய திரைப்படத்தில் நடித்துள்ளார். விஷால் 34 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் ஹீரோயினாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.
இவர் நடிகர் அருண் விஜயை வைத்து யானை படத்தினை இயக்கியுள்ளார்.இப்படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.இப்படம் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது
மேலும் அந்த படத்தில் கெளதம் மேனன், சமுத்திரகனி உள்ளிட்ட பலரும் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். இதன் படப்பிடிப்பு பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இவர் தனது மனைவியுடன் 21வது திருமண நாளை கொண்டாடியுள்ளார்,இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.