Wednesday, May 1, 2024

செவ்வாய் கிரகத்திற்கு செல்ல தயாராகும் இலங்கை பெண்!

செவ்வாய் கிரகத்தின் ஆய்வுக்காக நடத்தப்பட்ட ஆராய்ச்சிக்காக இலங்கை விஞ்ஞானி ஒருவரும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஹூஸ்டனில் உள்ள ஜான்சன் விண்வெளி மையத்தில் நாசாவால் கட்டப்பட்ட செவ்வாய் கிரகத்தின் சுற்றுச்சூழல் பண்புகள் கொண்ட ஒரு வாழ்விடத்தில் தொடர்புடைய பணி மேற்கொள்ளப்படுகிறது.

பணிக்கு நான்கு பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் ஜேசன் லீ, ஸ்டெபானி நவரோ, ஷெரீப் அல் ரொமைதி மற்றும் பியூமி விஜேசேகர என்ற இலங்கை விஞ்ஞானி ஆவார்.

அவர்கள் மே 10 ஆம் திகதி நாசாவின் “மனித ஆய்வு ஆராய்ச்சி அனலாக்” பணி பகுதிக்குள் நுழைய திட்டமிடப்பட்டுள்ளது. அதிலிருந்து 45 நாட்கள் விண்வெளி வீரர்களாக பணியாற்றுவார்கள் என்று நாசா அறிவித்துள்ளது.

விண்வெளி வீரர்களை சந்திரன், செவ்வாய் மற்றும் விண்வெளியின் பிற பகுதிகளுக்கு அனுப்புவதற்கு முன், அவர்களுக்கு தேவையான பூர்வாங்க பயிற்சியை வழங்க, ஜான்சன் விண்வெளி மையத்தில் கட்டப்பட்ட இந்த பணி மண்டலத்தை நாசா பயன்படுத்துகிறது.

இதன்மூலம், விண்வெளி வீரர்களின் செயல்பாடுகள் குறித்து தேவையான அறிவைப் பெறும் வாய்ப்பையும் விஞ்ஞானிகள் பெறுகின்றனர்.
இந்த ஆண்டுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாவது அணி இதுவாகும்.

இந்த குழுவிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள பியுமி விஜேசேகர, கலிபோர்னியாவில் உள்ள நாசா அமெஸ் ஆராய்ச்சி மையத்தில் உள்ள கதிர்வீச்சு உயிரியல் இயற்பியல் ஆய்வகத்தில் ஆராய்ச்சி விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார்.

RELATED ARTICLES

Most Popular