Sunday, May 19, 2024

யாழில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கை!

யாழ். குடாநாட்டில் படையினர் வசமுள்ள 68.57 ஏக்கர் நிலங்கள் நாளை(10)  விடுவிக்கப்படவுள்ளதாக  யாழ் மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.

குடாநாட்டில் தற்போது படையினர் வசமுள்ள 3 ஆயிரத்து 412 ஏக்கரில் இருந்து 68.57 ஏக்கர் விடுவிக்கப்படுகின்றது.

இதற்கான நிகழ்வு நாளை(10)  யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

இவ்வாறு விடுவிக்கப்படும் நிலங்களில் காங்கேசன்துறையில் 20.03 ஏக்கரும், தென்மயிலையில் 24.9 ஏக்கரும், அரியாலையில் 0.45 ஏக்கரும், வறுத்தளைவிளானில் 23.27 ஏக்கரும் அடங்குகின்றன.

அந்த நிலங்களுக்கான உரிமையாளர்கள் யாழ். மாவட்ட செயலகத்தில் பதிவுகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

RELATED ARTICLES

Most Popular