Thursday, May 9, 2024

இலங்கைக்கு சுற்றுலா வந்த ஈரானிய பிரஜைக்கு நேர்ந்த கதி!

கொழும்பிலிருந்து பதுளை நோக்கிச் செல்லும் பொதிமெனிக்கே எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து  ஈரானிய சுற்றுலாப் பயணி ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரயிலானது ஒஹிய வழியில் சென்றுக்கொண்டிருந்த போது அவர் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. 29 வயதான குறித்த சுற்றுலா பயணி தற்போது போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில்உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் பெர்னாண்டோவின் பணிப்புரையின் பேரில் ஹப்புத்தளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

Most Popular