Monday, May 20, 2024

நகர்புற மக்களை அதிகளவில் பாதிக்கும் வட்வரி : பொருளாதார நிபுணர்கள் கருத்து!

புதிய VAT திருத்தமானது கிராமப்புற மக்களை விட நகர்ப்புற மக்களையே அதிகம் பாதிக்கும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளியியல் துறையின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், வட் வரியால், நாட்டில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளன. எரிபொருள் விலை அதிகரித்துள்ளது, எரிவாயு விலையும் அதிகரித்துள்ளது. அதற்கேற்ப, போக்குவரத்துத் துறையில் விலை அதிகரிக்கலாம்.

.இது இந்நாட்டின் கிராமப்புற மக்களை விட நகர்ப்புற நடுத்தர மற்றும் ஏழை மக்களை அதிகம் பாதிக்கலாம். இது தாங்க முடியாத சூழ்நிலைக்கு வழிவகுக்கும்.

” இதேவேளை, இந்த ஆண்டு VAT திருத்தத்துடன், ஒவ்வொரு குடும்பமும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு மாதாந்தம் 32,000 ரூபா வரி செலுத்த வேண்டியுள்ளதாக வான்கார்ட் சோசலிச கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்தார்.

தற்போதைய முறைமை நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஏற்றதல்ல என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Most Popular