வடக்கு சுமத்ரா தீவு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகி சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
எவ்வாறாயினும், இந்த நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, முகத்துவாரப் பகுதிகளில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதுகாப்பாக உள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.