புகையிரத பராமரிப்பு பணிகளுக்கு கூட கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
புகையிரத சேவை தொடர்ச்சியாக நஷ்டத்தை ஏற்படுத்தி வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கேகாலை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர். “சமீபத்தில், பேருந்துகள் இல்லாத சாலைகளில் குழந்தைகள் பள்ளிக்கும் மருத்துவமனைக்கும் செல்ல இந்திய கடன் திட்டத்தின் கீழ் 500 பேருந்துகளை இந்தியாவிலிருந்து கடன் வாங்கினேன்.
கடன் வாங்காவிட்டால், CTB பேருந்துகளை வாங்க முடியாது. எங்களிடம் 60 ரயில்கள் உள்ளன. 70 வருடங்களாகியும் பணம் இல்லை, அவிசாவளையில் இருந்து கொழும்பிற்கு செல்லும் ரயில் பாதையை கடனாக மாற்றுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர் .” எனக் கூறியுள்ளார்.