Saturday, April 27, 2024

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை கிரித்தலே யாய 4 பகுதியில் நேற்று (14.04) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 17 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.

40 வயதுடைய நபரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகவும், அவருக்கும் சிறுமிக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கொலையுண்ட இளம்பெண் சிறிது காலத்திற்கு முன்பு துப்பாக்கிச் சூடு நடத்திய நபருடன் காதல் உறவில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன் பின்னணியிலேயே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. தற்போது சம்பவத்துடன் தொடர்புடைய நபர் தப்பிச் சென்றுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

RELATED ARTICLES

Most Popular