Saturday, April 27, 2024

மீளவும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் தொழிற்சங்கங்கள்!

எதிர்வரும் செவ்வாய்கிழமை காலை 6.30 மணி முதல் வேலைநிறுத்தம் ஆரம்பிக்கப்படும் என சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் இன்று பிற்பகல் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

பொருளாதார நீதியை அடைவதற்கு சுகாதார சங்கங்கள் வழங்கிய கால அவகாசம் இன்றுடன் (27.03) நிறைவடைந்துள்ளது.

அக்காலப்பகுதியில் தமது பிரச்சினைகளுக்கான தீர்வுகள் கிடைக்கவில்லை என சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Most Popular