Monday, May 20, 2024

கோப் குழுவில் இருந்து மற்றுமோர் உறுப்பினர் இராஜினாமா!

இலங்கையின் கோப் குழுவில் இருந்து மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினர் இன்று (20.03) இராஜினாமா செய்துள்ளார்.

நாடாளுமன்றம் இன்று கூடிய நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முப்பது உறுப்பினர்கள் கொண்ட குறித்த குழுவில் இருந்து இதுவரை 07 பேர் இராஜினாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Most Popular