Monday, May 20, 2024

பெரும்பாலான இடங்களில் கொட்டி தீர்க்கும் மழை!

வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் இன்று (09) மற்றும் நாளை (10) மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தீவின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும பிற்பகல் ஒரு மணிக்கு பிறகு பரவலாக மழை பெய்யும் என்றும் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும் என முன்னுரைக்கப்பட்டுள்ளதுடன்,  இடியுடன் கூடிய மழை, தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

RELATED ARTICLES

Most Popular