Monday, May 20, 2024

A-9 வீதியில் கோர விபத்து..! மூவர் பலி பலர் படுகாயம்

A-9 வீதியில், மாங்குளம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பனிச்சங்குளம் பகுதியில் மூன்று வாகனங்கள் விபத்தில் சிக்கியதில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் படுகாயமடைந்துள்ளனர்.இந்த விபத்து இன்று(15) அதிகாலை இடம்பெற்றுள்ளது.கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சொகுசு வாகனம் ஒன்றும் இரு லொறிகளும் மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளது.

முல்லேரியா புதிய நகரம், வெல்லம்பிட்டி மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 38, 46 மற்றும் 58 வயதுடையவர்களே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.விபத்து தொடர்பில் காவல்துறையினர் தெரிவிக்கையில், வீதிக்கருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றின் பின்பகுதியில் சொகுசு வாகனம் மோதிய நிலையில் குறித்த லொறி முன்னால் சென்ற மற்றுமொரு லொறியுடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.

பின்னால் இருந்த லொறியின் சாரதி இருக்கையை விட்டு இறங்கிய இருந்த நிலையில் இரண்டு லொறிகளுக்கு இடையில் சிக்கி பலத்த காயங்களுக்கு உள்ளானதாக தெரிவித்தனர்.

லொறியின் பின்பகுதியில் பயணித்த ஒருவரும், சொகுசு வாகனத்தின் முன் இருக்கையில் பயணித்த நபர் ஒருவரும் படுகாயங்களுக்கு உள்ளாகி மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளனர்.

மேலும், சொகுசு வாகனத்தில் பயணித்த மூன்று பெண்களும், லொறியில் பயணித்த ஆண் ஒருவரும் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், லொறியில் பயணித்த மூன்று ஆண்கள் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த விபத்து தொடர்பில் சொகுசு வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES

Most Popular